யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை - அம்பிகா நகர் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்று இன...
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை - அம்பிகா நகர் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றில், பகுதியளவில் மண்ணில் புதைந்திருந்த இந்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
மேற்படி கிளைமோர் குண்டை அவதானித்த பிரதேசவாசிகள் இராணுவத்தினருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் குண்டை மீட்ட இராணுவத்தினர் அதனை பலாலி இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.