பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் இலங்கையரான பிரியந்த குமார தியவடனவை துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொட...
பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் இலங்கையரான பிரியந்த குமார தியவடனவை துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதானமான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்தியாஸ் அலியா பில்லி என்ற பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.