வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக பயணபொதியில் மறைத்து எடுத்தச் செல்ல முயற்சித்த ஐவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள...
வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக பயணபொதியில் மறைத்து எடுத்தச் செல்ல முயற்சித்த ஐவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
சுங்க பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
95 ஆயிரம் அமெரிக்க டொலர், 18 ஆயிரம் யூரோ, 37 ஆயிரம் சவுதி ரியால் உள்ளிட்ட நாணய தாளிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த நாணயத்தாள்களின் இந்நாட்டு பெறுமதி 25 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனா். சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைள் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றன.