வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் சற்று முன்னர் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது. வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம...
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் சற்று முன்னர் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது.
வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம் திகதி கடலிற்கு இரு மீனவர்களின் படகு கரை திரும்பாத நிலமையில் மீனவர்கள் எடுத்துச் சென்ற வலை அறுத்தெறியப்பட்ட நிலமையில் கண்டு பிடிக்கப்பட்டது.
இதேநேரம் மீனவர்கள் பயணித்த படகும் இதுவரையில் மீட்கப்படாத நிலமையில் எல்லைதாண்டி வந்த இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகில் மோதியிருக.கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இன்று மீட்கப்படும் உடல் பரிசோதனையில் ஏதும் கண்டுகொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.