விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தை வலியுறுத்தி அரசியல்வாதிகளை அணுகும் நிகழ்வு இன்றையதி...
மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தை வலியுறுத்தி அரசியல்வாதிகளை அணுகும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் - நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர்
இந்துமதி கரிகரதாமோதரன் தலைமையில் "நீதிக்கான எங்களின் குரல்" எனும் தொனிப்பொருளில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பெண்கள் தொடர்பான அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.