நாடு முழுவதும் இன்றைய தினம் (02) 7 1/2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின...
நாடு முழுவதும் இன்றைய தினம் (02) 7 1/2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணிநேர மின்வெட்டும், இன்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் 2 1/2 மணித்தியால மின் விநியோக தடையும் ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.