பூநகரி முழங்காவிலில் தென்னை பராமரிப்பிற்குரிய காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு கற்பகதரு சங்கத்தலைவர் ச.உதயசங்கர் தலைமையில் கடந்த வா...
பூநகரி முழங்காவிலில் தென்னை பராமரிப்பிற்குரிய காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு
கற்பகதரு சங்கத்தலைவர் ச.உதயசங்கர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.
பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட KN 73 முழங்காவில் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 200 இற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை வடமாகாண தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன், சங்கத் தலைவர் ச.உதயசங்கர் மற்றும் ஆசிரியர் வசந்தி,தாதி சாந்தி ஆகியோர் வழங்கி வைத்தனர்.
கற்பகதரு சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன் சங்கரபாலன் மற்றும் சங்க அங்கத்தவர் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சபையின் பிராந்திய பண்ணைத் திட்டமிடல் உத்தியோகத்தர் வீ.சற்குணன் மற்றும் பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.ஜெயந்திரா மற்றும் சுரேன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.