யாழ் உதைபந்தாட்ட தலைவர் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் குருநகர் பாடுமீன் 1:0 என்ற கோள் கணக்கில் கிண்ணத்தை தனதாக்கியது. நேற்றைய தினம் ஞாயி...
யாழ் உதைபந்தாட்ட தலைவர் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் குருநகர் பாடுமீன் 1:0 என்ற கோள் கணக்கில் கிண்ணத்தை தனதாக்கியது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் உதைபந்தாட்ட தலைவர் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி அரியாலையில் அமைந்துள்ள யாழ் உதைபந்தாட்ட லீக் மைதானத்தில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்நீக்கிளாஸ் விளையாட்டுக்கழகம் மோதிக்கண்டது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியின் முதல்பாதி ஆட்டத்தில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் ஆதிக்கம் செலுத்திய நிலையில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை கோலாக மாற்றத் தவறினர் .
இவ்வாறான நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்த நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் மீண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம்
தனது முதலாவது கோலை பதிவு செய்தது.
இந்நிலையில் பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் நாவாந்துறை சென்நீக்கிளாஸ் விளையாட்டுக்கழகத்தினர் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்ட போதும் பின்கள வீரர்களின் சாதுரியமான தடுப்பு ஆட்டத்தினால் கோல் வரும் வாய்ப்புகள் இழக்கப்பட்டது.
இன் நிலையில் 1:0 என்ற கோல் கணக்கில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை தனதாக்கியது.
இப்படித்தான் போட்டியின் சிறந்த ஆட்டநாயகனாக குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழக சாந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த கோல் காப்பாளராக சென் நீக்ளஸ் அணி வீரர் ஜெயப்பிரசாந் தெரிவு செய்யப்பட்டார்.
இப் போட்டிக்கு பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் சிறப்பு விருந்தினராக யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட் அவரது பாரியார் நளாயினி ஆனல்ட் யாழ் உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் அரியநாயகம் அஜித்குமார் மற்றும் ஜனசக்தி காப்புறுதி நிறுவன
அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.