முழுமையாக விபத்துக்குள்ளான வாகனத்திற்கு முழு இழப்பீடு வழங்கி வைக்கப்பட்டது. சாவகச்சேரி பகுதியில் இயங்கி வரும் வாகன காப்புறுதி நிறுவனமான அ...
முழுமையாக விபத்துக்குள்ளான வாகனத்திற்கு முழு இழப்பீடு வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி பகுதியில் இயங்கி வரும் வாகன காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தினாலேயே முழுமையாக விபத்துக்கு உள்ளான வாகனத்திற்கு முழு காப்புறுதி வழங்கிவைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
கடந்த வருடம் DFCC வங்கியின் ஊடாக அலியான்ஸ் நிறுவனத்திற்கு பூரண வாகன காப்புறுதி செய்யப்பட்ட 79 இலட்சத்தி 75 ஐயாயிரம் (79,75000) பெறுமதியான சொகுசு வாகனம் ஒன்று முழுமையாக விபத்துக்கு உள்ளாகி சேதமடைந்த நிலையில் வாகன உரிமையாளருக்கு வாகனத்தின் முழு பெறுமதி பணமான (79,75000) நேற்றைய தினம் அலியான்ஸ் நிறுவனத்தின் சாவகச்சேரி கிளை முகாமையாளர் திரு. ரகுகுலநாத் அவர்களினால் DFCC வங்கியின் நெல்லியடி கிளையின் முகாமையாளர் திரு. மரியதாஸ் அவர்களிடம் காசோலையாக வழங்கிவைக்கப்பட்டது இதன்போது அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. அனோசன் மற்றும் RIB அதிகாரி திரு.சத்தியபிரதாப் ஆகியோர் உடன் இருந்தனர் .