உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இதயபூர்வமாக இன்று நண்பகல் 12 ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இதயபூர்வமாக இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் அமைந்துள்ள தூபியில் இடம்பெற்றது .
இதன்போது பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் உயிர்த்தஞாயிறு தாக்குதலை வெளிப்படுத்தும் நினைவுருவப்படத்திற்கு மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாவர்களால் ஒரு நிமிட அகவணக்கமும் இடம்பெற்றது.
இதன்போது பல்கலைக்கழகத்தின் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களுக்கு யாழ் பல்கலை மாணவர்களால் இதயபூர்வமாக அஞ்சலி! #lka #Easter2022 #jaffnauni pic.twitter.com/Oge22qIDSd
— Shabesh Max (@shabezs) April 21, 2022