மக்களை வருத்தும் ஆட்சி வேண்டாம்.. யாழ் சுன்னாகத்தில் கொடும்பாவி எரித்து போராட்டம். நாட்டு மக்களை வருத்தும் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக...
மக்களை வருத்தும் ஆட்சி வேண்டாம்.. யாழ் சுன்னாகத்தில் கொடும்பாவி எரித்து போராட்டம். நாட்டு மக்களை வருத்தும் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சி வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து தினம் யாழ் சுன்னாக பஸ் தரிப்பிடத்தில் கொடும்பாவி எரித்து போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக ஒவ்வொரு குடிமகனும் செய்வதறியாது தவித்து வருகிறான் . நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய ராஜபக்சக்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மஹிந்த ராஜபக்சவுக்கு வயது போய்விட்டது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் அல்ல பசில் ராஜபக்ச நாட்டை சூறையாடுகிறார். ராஜபக்ச ஒவ்வொருவரும் திருடிய பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியதால் நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியால் தவிக்கிறார்கள் .
நாட்டில் மக்களைப் வருத்தும் அரசாங்கம் தேவையில்லை உங்களால் நாட்டை வழிநடத்த முடியாது என தெரிந்து விட்டது ஆகையால் வீட்டுக்குச் செல்லுங்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். போராட்டக்காரர்களால் பாடையில் சுமந்து வந்த ஜனாதிபதியின் உருவபொம்மை பஸ் தரிப்பிடத்தில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது