மின்சார கட்டணத்தை இந்த ஆண்டு அதிகரிக்காவிட்டால், இலங்கை மின்சார சபை, சுமார் 250 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என பொதுப்...
மின்சார கட்டணத்தை இந்த ஆண்டு அதிகரிக்காவிட்டால், இலங்கை மின்சார சபை, சுமார் 250 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள், அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார கட்டணம் 100 வீதம் அதிகரிக்கப்படும் என்று முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.