ரயில் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர த...
ரயில் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலை ரயில்வே திணைக்களத்திற்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொதுமக்களுக்கு போதியளவில் போக்குவரத்து சேவைகளை வழங்கும் வகையில் நேற்று முதல் சில ரயில் சேவைகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க களனிவெளி ரயில்பாதை மற்றும் ஏனைய பிரதான ரயில் பாதைகளில் புதிதாக ரயில் சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரயிலில் பயணிப்போரரின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடும் அவர், ஆனாலும் ரயில்வே திணைக்களத்தின் வருமானம் எந்த விதத்திலும் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.