குழப்பமின்றி எரிபொருளைக் வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் முகமாலை எரிபொருள் நிலைய உரிமையாளர் மயில்வாகனம் ஸ்ரீதாசன் தெரிவிப்...
குழப்பமின்றி எரிபொருளைக் வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் முகமாலை எரிபொருள் நிலைய உரிமையாளர் மயில்வாகனம் ஸ்ரீதாசன் தெரிவிப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள் அனைத்து மக்களுக்கும் சரியான முறையில் எரிபொருள் கிடைக்க வேண்டும்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் காணப்படும் எமது எரி பொருள் நிரப்பு நிலையத்தில் 50 நாட்களுக்குப் பின் மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எமக்குக் கிடைத்த எரிபொருளினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கும் யாழ் மாவட்டத்தில் அடங்கும் எழுதுமட்டுவாள்,கரம்பம் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கும் வழங்குவதற்கு அரச அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது நிலவுகின்ற எரிபொருள் நெருக்கடியான காலப்பகுதியில் ஏனைய பிரதேசங்களில் இருந்து வந்து உங்கள் எரிபொருளையும் பொன்னான நேரத்தினை வீணாகாது உங்கள் பிரதேசங்களில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் மற்றும் யாழ் மாவட்டத்தில் அடங்கும் எழுதுமட்டுவாள் கரம்பம் ஆகிய கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் அனைவரும் உங்கள் கிராமசேவகரினால் வழங்கப்படும் எரிபொருள் அட்டையினை கொண்டு வந்து எரிபொருள் வழங்கும் நேரங்களில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
அத்துடன் கிராம சேவகரினால் வழங்கப்படும் எரிபொருள் அட்டை இருந்தால் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் எனவும் எரிபொருள் அட்டை இன்றி வருகை தந்தால் எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.