நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்ட...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தினால் நுவரெலிய மாவட்டத்திலேயே மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதியிலேயே இந்த மூன்று உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
1766 குடும்பங்களைச் சேர்ந்த 7649 பேர் இந்த சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 945 குடும்பங்களைச் சேர்ந்த 3871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 819 குடும்பங்களைச் சேர்ந்த 3771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலிhய மாவட்டத்தில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் 726 குடும்பங்களைச் சேர்ந்த 3378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட 643 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேர் 16 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.