நல்லூர் ஆலயத்தில் மேற்கு பக்கமாக செல்லும் ஒரு வீதியானது முழுமையாக மூடப்பட்டுள்ளதால் அதனை திறந்து விடுமாறுகோரி யாழ் மாநகர பிரதி மேயர், யாழ் ம...
நல்லூர் ஆலயத்தில் மேற்கு பக்கமாக செல்லும் ஒரு வீதியானது முழுமையாக மூடப்பட்டுள்ளதால் அதனை திறந்து விடுமாறுகோரி யாழ் மாநகர பிரதி மேயர், யாழ் மாநகர முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நல்லூர் ஆலயத்தின்
மேற்கு பக்கமாக செல்லும் ஒரு வீதியானது முழுமையாக மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஒரு வீதியால் மட்டும் வந்து செல்வது மிகவும் கஷ்ரமாக இருப்பதை என்னால்
அவதானிக்க முடிகின்றது. அத்துடன் களவுகள் ஏற்படுகின்ற நிலையும் காணப்படுகின்றது.
ஏனையவர்களும் இதனால் அச்சத்துடன் உள்ளனர். முதியோர்கள் உட்பட
மலசலகூடத்தினை பாவிப்பதற்கு சுற்றிப் போக வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர்
அசௌகரியங்களை சந்திக்கின்றனர். அந்த வீதியில் உள்ள பல கடைகளுக்கு பக்தர்கள் வருகை மிகக் குறைவாக இருப்பதனால் யாழ் மாநகரசபைக்கு வாடகையும் கொடுபடாமல் இருப்பதை
அவதானிக்க முடிகின்றது.
இதனால் சபைக்கு வரவேண்டிய
இருப்பதையும்
வருமானம் குறைகின்றது.
அத்துடன் அவ்வீதியிலுள்ள சில வியாபாரிகளுக்கு வியாபாரம் குறைந்து
வாழ்வாதாரம் பாதிக்கின்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா உச்சக்கட்டத்தில் உள்ள போது
பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பக்தர்களின் நன்மை
கருதி நோய் தொற்று ஏற்படா வண்ணம் தற்காலிகமாக அவ்வீதி அந்த வருடத்தில் மட்டும் பூட்டி இருந்தது.
ஆனால் முன்பு இரண்டு பக்கமும் மூன்று அடி பாதை திறந்து
இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே பக்தர்களின் நலன் கருதியும் வியாபாரிகளின் நலன் கருதியும்
இப்பாதையை முழுமையாக அல்லது பகுதியளவான இரண்டு பக்கமும் தலா இரண்டு அடியாவது தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி திறந்து விடுமாறு கேட்டுக்
கொள்கின்றேன் என்றுள்ளது.