நெடுந்தீவு அனலைதீவு போன்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீ...
நெடுந்தீவு அனலைதீவு போன்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு மீன்பிடிக்க சென்ற அப்பகுதி மீனவர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கைக் கடற்படையினர்,
இந்திய துணைத்தூதரகம் ஆகியோர் வடபகுதி கடலுக்குள் அத்துமீறி இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.