இன்றிரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன வ...
இன்றிரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 40 ரூபாவாலும், ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலையை 15 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் புதிய விலையாக 370 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலையாக 415 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, சிபேட்கோ நிறுவனத்தின் விலை குறைப்புக்கு அமைய, தமது நிறுவனமும் எரிபொருளின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.