யாழ்.மாவட்டத்திலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ்.மாவட்டத்திலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ்.மாவட்டத்திலிருந்து இந்தியாவுக்கு பக்தி யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மலோியா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.பிராந்திய சு...

யாழ்.மாவட்டத்திலிருந்து இந்தியாவுக்கு பக்தி யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மலோியா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

எதிர்வரும் மாதம் ஐயப்பன் விரத நிறைவை முன்னிட்டு யாழ்.மாவட்டத்திலிருந்து பலர் இந்தியாவிற்கு ஐயப்பன்தல யாத்திரை செல்லவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் மலேரியா தொற்று நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார், 

இலங்கை 2016 ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மலேரியாத்தொற்று பரவவில்லை.



எனினும் கடந்த ஆண்டுகளில் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் இந்தியா மற்றும் ஆபிரிக்கநாடுகள் போன்ற வேறு நாடுகளில் இருந்துவரும் பயணிகளில் மலேரியா தொற்றுடன் பலர்இனங்காணப்பட்டுள்ளனர். 

இது மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர் நோக்கும்மிகப்பெரிய சவாலாகும்.எனவே மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளுக்கு ஐயப்பன் தலயாத்திரைக்கோ அல்லது வேறு தல யாத்திரைகளுக்கோ செல்பவர்கள்

முற்காப்பாக தடுப்பு மருந்துகளை ஒருவாரத்திற்கு முன்பிருந்தே உரிய முறையில் உள்ளெடுப்பதன் மூலம் தமக்கு மலேரியா தொற்று ஏற்படுவதைதடுக்கலாம்.எனவே இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மலேரியா நோயில் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக 

தமது பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்வதன் மூலம் அருகில் உள்ளசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது சுகாதார கிராமம் பண்ணையில் அமைந்துள்ளபிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனையிலோ 

(தொ.பே.இல 021- 222 7924) தடுப்பு மருந்துகளைபெற்றுக்கொள்ள முடியும். மேலும் இவர்கள் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் நாடுகளில் தங்கிஇருக்கும் காலப்பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை தடுப்பு மருந்துகளை தொடர்ந்து உள்ளெடுப்பதோடு பயணம் நிறைவுற்று நாடு திரும்பிய பின்பும் 

நான்கு வாரங்கள் நிறைவுறும்வரை வாரத்திற்கு ஒருமுறை தடுப்பு மருந்துகளை தொடர்ந்து எடுக்கவேண்டும். அவ்வாறே ஒருவருடத்திற்குள் காய்ச்சல் ஏற்படின் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்கள்பயணம் தொடர்பான விபரங்களை வைத்தியருக்கு வழங்குவதுடன் மலேரியா நோய்க்காக குருதியினைபரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இவ்வாறான பயணங்களை மேற்கொள்ளும்; யாராவதுகுருதிக்கொடையாளர்களாக இருந்தால் மூன்று வருடங்களுக்கு இரத்ததானம் வழங்க முடியாது.மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் பெருமளவாக எமது பிரதேசத்தில் காணப்படுகின்றன.


மேலும் அண்மைக்காலங்களாக நகர்ப்புற மலேரியாவை பரப்பக் கூடிய அனோபிலிஸ் ஸ்டெபென்சி வகைநுளம்புகளும் எமது பிரேதேசங்களில் காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையானது மலேரியாநோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் வகை ஒட்டுண்ணிகளை ம

னித உடலிலிருந்தும் அதை காவிப்பரப்பும்நுளம்புகளில் இருந்தும் ஒழித்ததன் மூலமே மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.எனவே காவிகள்பெருமளவாக காணப்படும் எமது பிரதேசத்தில் மலேரியா நோய்க்கான ஒட்டுண்ணியுடன் ஒருவர் இருந்தாலே அவ்இடத்தில் மலேரியா மீண்டும் விரைவாக பரவும் அபாயம் உள்ளது. 

உங்களுக்கு தெரிந்தவர்களில் யாராவது இந்தியா போன்ற நாடுகளுக்கு தல யாத்திரைகள் சென்றுவந்திருப்பின் அருகில் உள்ள வைத்தியசாலைகள் ஏதேனும் ஒன்றில் அல்லது சுகாதார அதிகாரிகாரியாலயத்தை அணுகி மலேரியா நோய்க்கான குருதிப் பரிசோதனையை செய்துகொள்வதைஉறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்போம் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3316,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ்.மாவட்டத்திலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்.மாவட்டத்திலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiE9-MBueOAqF4qIKU8ajaeW3vDt5nZUoGDiFuZLDeV27NpdN_pBSTNV7uRd-fFvIrvfRqJI1zrBK3pMa2LWMa8SpdM__30INFi9vrPIOXmGeODq_GMPbKCez-YyBbTRoK_Mwx8BaAGQrCet2mygEeHPJpxYgGSyON-PRU_cclrmNDzSORKAyGPujNN=w640-h296
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiE9-MBueOAqF4qIKU8ajaeW3vDt5nZUoGDiFuZLDeV27NpdN_pBSTNV7uRd-fFvIrvfRqJI1zrBK3pMa2LWMa8SpdM__30INFi9vrPIOXmGeODq_GMPbKCez-YyBbTRoK_Mwx8BaAGQrCet2mygEeHPJpxYgGSyON-PRU_cclrmNDzSORKAyGPujNN=s72-w640-c-h296
Yarl Express
https://www.yarlexpress.com/2022/12/blog-post_39.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/12/blog-post_39.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content