உள்ளூராட்சித் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்...
உள்ளூராட்சித் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னரான மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டம் குறித்தும் கண்காணிப்பாளர்கள் அவதானம் செலுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.