வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களுடன் கலாநிதி ஆறு திருமுருகன்அ...
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களுடன் கலாநிதி ஆறு திருமுருகன்அவர்கள் இன்றைய தினம் சென்று பார்வையிட்டார்.
குறித்த அழிபாடு அமைந்துள்ள இடத்தில் எதிர்வரும் பங்குனி உத்தர தினத்தன்று (06.04.2023) சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான அனுமதியினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பங்குனி உத்திரத்திற்கு முன்னர் அதற்குரிய அனுமதி கிடைத்தால் அவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்,