முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போலியாக தங்கநிறமுலாம் பூசி தொல்லியல் பொருட்கள் என ஏமாற்றி விற்பனை செய்யமுற்பட்ட ...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போலியாக தங்கநிறமுலாம் பூசி தொல்லியல் பொருட்கள் என ஏமாற்றி விற்பனை செய்யமுற்பட்ட இருவரை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று(16) கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்..
இன்று(16) மாலை நுவரெலியாவினை சேர்ந்த இருவர் இவ்வாறான நூதன திருட்டில் ஈடுபட முற்பட்டுள்ளார்கள்.
குமாரபுரம் பகுதியில் வைத்து விற்பனை செய்யமுற்பட்ட வேளை இருவரையும் பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்
பொலீசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.