உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸியின் மனைவியான அன்டோனெல்லா ரொக்குஸோவின் குடும்பத்துக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் துப்பாக்க...
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸியின் மனைவியான அன்டோனெல்லா ரொக்குஸோவின் குடும்பத்துக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியமை சிசிடிவியில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் “மெஸ்ஸி நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம், ஜாவ்கினும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர், அவர் உங்களை கவனித்துக் கொள்ளப் போவதில்லை.” என்று எழுதிய குறிப்பையும் விட்டுச்சென்றுள்ளனர்.
மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவின் மேயராக “பாப்லோ ஜாவ்கின்” உள்ளார்.
நகரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் மெஸ்ஸியோ அல்லது மனைவி அன்டோனெல்லா ரொக்குசோவோ இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மெஸ்ஸி குடும்பத்தை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.