யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது...
யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பால்நிலை சமத்துவத்திற்கான புதுமை தொழில்நுட்பம் எனும் கருப் பொருளில் 2023ஆம் ஆண்டுக்கான மகளீர் தினம் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படன.
இவ் நிகழ்வில் வடக்குமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இந்திய துணைத்தூதவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.