பொது மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து மற்றும் சம்பள அதிகரிப்பை வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் யாழ்ப்பா...
பொது மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து மற்றும் சம்பள அதிகரிப்பை வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மூன்றில் இரண்டு பங்கு சம்பள அதிகரிப்பை வழங்கு, 20000 ஆயிரம் ரூபா உதவித்தொகையை வழங்கு, அதிபர் ஆசிரியர்களின் கொள்ளையடித்த பணத்தை வழங்கு , பழைய கடன்களுக்கு வட்டியை அதிகரிக்காதே, சம்பளம் மற்றும் நிலுவைக்கான வரியை இரத்துச் செய், பிள்ளைகளின் போசனைப் பிரச்சனைக்கு தீர்வை வழங்கு, பொது மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் மேற்கொள்கின்ற அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் விரைவாக தீர்வை வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.