ஈழத்தில் உருவாகியுள்ள “டக் டிக் டோஸ்” திரைப்படம் நாளை யாழ்ப்பாணத்தில் திரைக்கு வரவுள்ளது. சிவராத்திரி தினமான நாளைய தினம் யாழ்ப்பாணம் ராஜா தி...
ஈழத்தில் உருவாகியுள்ள “டக் டிக் டோஸ்” திரைப்படம் நாளை யாழ்ப்பாணத்தில் திரைக்கு வரவுள்ளது.
சிவராத்திரி தினமான நாளைய தினம் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் காலை 10.30 , மதியம் 01.30 , மாலை 4 மணி , மாலை 6.30 மற்றும் இரவு 09.30 என ஐந்து காட்சிகள் இடம்பெறும்.
பருத்தித்துறை எஸ்.எஸ். திரையரங்கில் மாலை 3 மணி , 6 மணி மற்றும் இரவு 9 மணி காட்சிகள் இடம்பெறும்.
சாவகச்சேரி பாலா திரையரங்கில் மாலை 04.30 மற்றும் மாலை 06.30 மணி காட்சிகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளில் திரைப்படவுள்ளது.
அதேவேளை கனடாவில் எதிர்வரும் 09ஆம் திகதி Scarborough City, Woodside Cinemas மதியம் 1மணிக்கும், 10ஆம் திகதி சுவிஸ் Liestal மாநிலத்தில் உள்ள KINOORIS திரையரங்கில் காலை 11.30 மணிக்கு திரைப்படவுள்ளது.
ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளமையால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் திரைக்கு வருகின்றது.