தற்போதைய அரசாங்கம் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயற்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேர...
தற்போதைய அரசாங்கம் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயற்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப் போன்று சீனாவுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதற்குச் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த கப்பல் இந்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கப்பல் வருகையால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
முன்னதாக அமெரிக்க, இந்திய மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
இத்தகைய இராஜதந்திர உறவுகளில், தாங்கள் அனைத்து நாடுகளையும் சமமான முறைமையில் கையாளுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.