உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டி...
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனின் செர்னோபெல் அணு உலை மீது ரஷ்யா நேற்று(13) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“நேற்றிரவு (13) அதிக வெடிக்கும் திறன்கொண்ட போரில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களின் மூலம் ரஷ்யா செர்னோபில்லில் உள்ள அழிக்கப்பட்ட நான்காவது அலகு அணு உலையில் இருக்கும் கதிர் வீச்சுகளில் இருந்து உலகை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு அமைப்பு (shelter) மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் ட்ரோன் தாக்குதலால் செர்னோபில் அணு உலை கதிர்வீச்சு தடுப்பு அமைப்பு சேதமடைந்துள்ளது. தீ அணைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலலில் கதிர் வீச்சு அளவு அதிகரிக்கவில்லை, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட மதிப்பீட்டின் படி தடுப்புஅமைப்பு குறிப்பிடத் தகுந்த அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த நூற்றாண்டிலும் அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியே கசிந்து விடாத வகையில் அந்த தடுப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.