கேப்பாப்பிலவில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்ப்ட பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு தினமான இன்று பெங்கல் பொங்கி மக்க...
கேப்பாப்பிலவில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்ப்ட பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு தினமான இன்று பெங்கல் பொங்கி மக்கள் விசேட வழிபாட்டினை நடத்தியுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணியும், சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணியுமாக மொத்தம் 133.34 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
இதனடிப்படையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று சென்ற மக்கள் அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவ ஏற்பாட்டில் பொங்கல் பொங்கி விசேட வழிபாட்டினை நடத்தியிருந்தனர்.