தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தில் புலிகளின் இலட்சினையை இணைத்து 2018ஆம் ஆண்டு புது வருட வாழ்த்துக்களை ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தில் புலிகளின் இலட்சினையை இணைத்து 2018ஆம் ஆண்டு புது வருட வாழ்த்துக்களை முகநூலில் பகிர்ந்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
செவன் தினேஷ்குமார், விஜேகுமார் விதூஷன் ஆகிய இருவரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்கள் இருவரும் கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
2007ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்துக்கு அமைவாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.