கமல்ஹாசன் பங்கேற்ற அரசியல் பொதுக்கூட்ட மேடையில் பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகன் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மக்கள் நீதி...
கமல்ஹாசன் பங்கேற்ற அரசியல் பொதுக்கூட்ட மேடையில் பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகன் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரிலான கட்சியை நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கினார்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் கமல் மேடைக்கு வருவதற்கு முன்னர் அவரின் ஆதரவாளர் சினேகன் மக்கள் முன்னிலையில் பேசினார்.
அவர் கூறுகையில், இந்த கூட்டம் மக்களை பயன்படுத்துகிற கூட்டமல்ல, மக்களுக்கு பயன்படும் கூட்டம் என நாம் நிரூபிக்க வேண்டும்.
இது நானாக சேர்த்த கூட்டம் இல்லை, தானாக சேர்ந்த கூட்டம் என சிலர் டயலாக் பேசலாம், ஆனால் இது தான் உண்மையில் அன்பால் தானாக சேர்ந்த கூட்டம் என கூறியுள்ளார்.
பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் இது நானாக சேர்த்த கூட்டம் இல்லை, தானாக சேர்ந்த கூட்டம் என டயலாக் பேசுவார்.
இந்நிலையில் ரஜினியை தான் சினேகன் விமர்சித்துள்ளார் என சமுகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.