முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் கோட்டபாய கடற்படைமுகாம் அமைந்துள்ள காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக இன்று காலை மேற்படி ...
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் கோட்டபாய கடற்படைமுகாம் அமைந்துள்ள காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக இன்று காலை மேற்படி காணி அளவீடு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மேற்படி காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் இணைந்து இன்று காலை 7.30 மணி தொடக்கம் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சுமார் 670 ஏக்கர் காணியில் போருக்கு பின்னர் கோட்டபாய கடற்படை
முகாம் என்னும் பெயரில் பாரிய கடற்படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.
முகாம் என்னும் பெயரில் பாரிய கடற்படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி காணியில் 617 ஏக்கர் காணி மக்களுக்கு சொந்தமான காணியாகும். மேற்படி காணியை பொது தேவைக்கென அடையாளப்படுத்தி கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முயற்சிக்கப்பட்டது.
ஆயினும் காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல் வாதிகள் எதிர்ப்பினால் மேற்படி அளவீட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை பொது தேவைக்கென அடையாளப்படுத்தி கடற்படையினரின் தேவைகளுக்காக மீண்டும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு மேற்படி காணி நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்ய அதிகாரிகள் சம்பவ இடத்துற்கு வந்திருந்தனர்.
எனினும் மக்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பினால் அளவை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. எனினும் அளவையாளர்கள் அங்கிருந்து செல்லாத நிலையில் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.
தற்போது வட்டுவாகல் பாலத்தை மூடி தற்போது போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.