மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வழி...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கியுடன் இணைந்து குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், எனப்பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த இரத்ததான முகாமில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லன கலந்து கொண்டுள்ளார்.