அமெரிக்காவில் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் விஷவாயு தாக்கியதில் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவி...
அமெரிக்காவில் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் விஷவாயு தாக்கியதில் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள புனித லூயி பகுதியில் இருந்து மெக்சிகோவிற்கு 7 நாள் சுற்றுலா பயணமாக குழந்தைகளுடன் தம்பதியினர் சென்றுள்ளனர்.
கெவின் ஷார்ப், ஏமி ஷார்ப் என்ற அந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகள் ஸ்டெர்லிங் வென்(12) மற்றும் அட்ரியனா மெரி(7) ஆகியோருடன் மெக்சிகோவின் Cancun நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
7 நாள் பயணமாக சென்றிருந்த அவர்கள், சொந்த ஊருக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த ஏமியின் சகோதரி ரெனி ஹொட், இது குறித்து உடனடியாக மெக்சிகோ பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மட்டுமின்றி, இறுதியாக குடியிருப்பு ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது சகோதரியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததாக ரெனி கொடுத்த கூடுதல் தகவலின் அடிப்படையில் பொலிசார் தீவிரமாக தேடியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியின் விடுமுறை நாள் குடியிருப்பு ஒன்றில் இருந்து 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியான ஒரு வகை விஷவாயுவை சுவாசித்ததால் தான் நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், குறித்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள புனித லூயி பகுதியில் இருந்து மெக்சிகோவிற்கு 7 நாள் சுற்றுலா பயணமாக குழந்தைகளுடன் தம்பதியினர் சென்றுள்ளனர்.
கெவின் ஷார்ப், ஏமி ஷார்ப் என்ற அந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகள் ஸ்டெர்லிங் வென்(12) மற்றும் அட்ரியனா மெரி(7) ஆகியோருடன் மெக்சிகோவின் Cancun நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
7 நாள் பயணமாக சென்றிருந்த அவர்கள், சொந்த ஊருக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த ஏமியின் சகோதரி ரெனி ஹொட், இது குறித்து உடனடியாக மெக்சிகோ பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மட்டுமின்றி, இறுதியாக குடியிருப்பு ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது சகோதரியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததாக ரெனி கொடுத்த கூடுதல் தகவலின் அடிப்படையில் பொலிசார் தீவிரமாக தேடியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியின் விடுமுறை நாள் குடியிருப்பு ஒன்றில் இருந்து 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியான ஒரு வகை விஷவாயுவை சுவாசித்ததால் தான் நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், குறித்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.