யுத்தத்தில் புலிகளின் மையப்பகுதிகளை காட்டிக்கொடுத்த சிறிதரன் எம்.பி தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி தீபன் உட்பட பெருமளவான முக்கிய போர...
![]() |
யுத்தத்தில் புலிகளின் மையப்பகுதிகளை காட்டிக்கொடுத்த சிறிதரன் எம்.பி |
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி தீபன் உட்பட பெருமளவான முக்கிய போராளிகள் ஒரே நேரத்தில் அழிக்கப்பட்டமைக்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் என்று ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
அப் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியம், யுத்த குற்றம் போன்றவற்றை பேசும் உரித்துடையவர் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமைத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஈ.பி.டி.பி கட்சியின் தலமை யுத்தக் குற்றம் புரிந்தவர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கருத்து வெளியிட்டுள்ளார். முதலில் அவருக்கு யுத்தக் குற்றம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்.
அவரை கேட்டால் தான் இறுதிப் யுத்தத்தில் முள்ளிவாக்கல்வரைக்கும் செய்று வந்ததாக சொல்லுகின்றார். ஆனால் யுத்த பிரதேசத்தில் நின்ற தொண்டு நிறுவனங்கள் முதல் முதலில் கிளிநொச்சியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த போது அவர்களுடன் சேர்ந்து சிறிதரனும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார். ஆனால் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்ததாக கூறுகின்றார்.
சிறிதரன் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர்தான் தளபதி தீபன் உட்பட ஏராளமான தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அவருடைய கடந்த காலத்தை பேசினால் வெட்கக் கேடாக இருக்கும் என்றார்.