எமது சமுதாயத்தையும்,நாட்டையும் அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்து போதையற்ற நாட்டை உருவாக்க எதிர்கால இளைஞர்களின் இலட்சிய பயணத்துக்கு உறுதுணை...
எமது சமுதாயத்தையும்,நாட்டையும் அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்து போதையற்ற நாட்டை உருவாக்க எதிர்கால இளைஞர்களின் இலட்சிய பயணத்துக்கு உறுதுணையாக கைகோர்க்குமாறு முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் கந்தர்மடம் பிரதேசத்தில் அமைந்துள்ள சைவபிரகாச வித்தியாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற போதையை ஒழிக்கும் நடைமுறை விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது பிரதேசத்தில் இடம்பெறும் ஒவ்வொரு அசம்பாவிதங்களும் எமது கலாச்சார சீரழிவுக்கே பங்கம் ஏற்படுகிறது.அண்மைய காலங்களில் பெருந்தொகையான போதை பொருட்கள் காவல் துறையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனால் எங்களுடைய சமுதாயம் அழிந்தும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.சீரழிவுகளை தடுக்க போதை பாவனைக்கு எதிராக அவற்றை அழித்தொழிக்க நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
பயணிக்கும் நோக்கம்,திசைகள் தெரியாமலேயே பிரசினைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.எமது நாட்டை கட்டி எழுப்ப எம்மாளான முயற்சிகளை நிற்சயம் ஏற்ப்படுதிக்கொள்ள வேண்டும்.எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு நிறுவனங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடத்திற்கு துறை சார்ந்த கற்றல் அக்கறையினமே காரணம். மாணவர்கள் அதனை வளர்த்து கொள்ள வேண்டும்.பொன்னான கல்வி பயிலும் காலத்தில் சிறந்த நகர்வுகளை நோக்கி நகர்ந்தாலே இளைஞர்கள் இலட்சியங்களை நோக்கி நகரலாம்.
கௌரவ ஜனாதிபதி அவர்களின் எண்ணமும் நாட்டை மீட்சி அடைய செய்து,போதையற்ற நாட்டை கட்டி எழுப்புவதோடு, எமது இளைஞர், யுவதிகளையும் மக்களையும் பாதுகாக்கும் செயல் திட்டம் வரவேற்ககூடியது.
பிள்ளைகளதும்,குடும்பங்களினதும் ,நாட்டினதும் எதிர்காலம் குறித்த எண்ணங்களுக்கும்,மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் நிற்சயம் கரம் கோர்த்து பலம் சேர்ப்பீர்கள் என நம்பிக்கை வெளியிட்டு உரையாற்றியிருந்தார்.