தமிழர் அரசியல் பரப்பில் முன்னாள் முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிபந்தனைகளை விதிப்பத...
தமிழர் அரசியல் பரப்பில் முன்னாள் முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிபந்தனைகளை விதிப்பதாகவும் கூட்டணி அமைப்பது தொடர்பிலான பேச்சுக்கள் அல்லது சந்திப்புக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்ற போதும் முன்னணியினர் அதற்கு வர மறுத்து வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணி முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்துள்ளது.
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் விக்னேஸ்வரனே நிபந்தனைகளை விதிப்பதாகவும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக்களை அவரே தடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கும் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வல்லரசுகளின் நலன்களுக்காகச் செயற்பட்டு வருகின்ற கூட்டமைப்பு எதிர்காலத்தில் பாரிய தோல்வியை எதிர்நோக்குமென்பதால் அதற்கு மாற்றாக அந்த வல்லரசுகளுக்காகச் செயற்படக் கூடியவர்களை இணைத்து புதிய அணியொன்றை அந்த வல்லரசுகளே உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளைக் கைவிட்டு மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதால் அதிலிருந்த நாங்கள் வெளியேறி புதிய கட்சியை உருவாக்கி மக்களுக்கு உண்மைகளைச் சொல்லி வந்தோம். கடந்த பத்து வருடங்களாக நாங்கள் சொல்லி வந்த உண்மைகளை இன்றைக்கு மக்களும் உணரத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் மக்கள் கூட்டமைப்பு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றதால் அந்த மக்கள் எங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்ற அச்சம் இன்றைக்கு பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்தியா போன்ற சர்வதேச அல்லது வல்லரசுகளின் நல்னகளுக்காக அவர்களது எடுபிடிகளாக கூட்டமைப்பினர் செயற்பட்டு வந்தனர். ஆனால் கூட்டமைப்பின் இந்தச் செயற்பாடுகளை மக்கள் உணர்ந்துள்ளதால் கூட்டமைப்பினர் எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயம் பாரிய தோல்வியை எதிர்நோக்கப் போகின்றனர் என்ற அடிப்படையில் புதிய அணியொன்றை உருவாக்கும் செயற்பாடுகளில் இந்த வல்லரசுகள் இருக்கின்றன.
ஆனால் அந்த வல்லரசுகளின் நலன்களுக்காக மட்டும் செயற்பட நாம் ஒரு போதும் தயாரில்லை என்பதாலும் எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி பேரம் பேசக் கூடிய தரப்பாக நாங்கள் இருப்பதால் அவர்கள் தங்களுக்குச் சார்பாகச் செயற்படக் கூடியவர்களை இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்கப் போகின்றனர். அந்த அணியில் இந்தியாவின் அல்லது இலங்கை அரசுகளின் விசுவாசிகளாக இருக்கின்ற ஈபிஆர்எல்எப் போன்ற தரப்புக்கள் உள்வாங்கப்பட்டால் நாங்கள் அந்த அணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
ஏனெனில் கூட்டமைப்பினர் செய்து வருகின்ற அதே செயற்பாடுகளையே இவர்களும் செய்யப் போகின்றனர். அகவே அதில் நாமும் இணைந்து கொள்வதால் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. இந்த உண்மைகளை நாம் இன்று சொல்கின்றோம். ஆனால் கடந்த காலங்களில் கூட்டமைப்பு தொடர்பில் நாம் இவ்வாறு சொல்லி வந்த உண்மைகளை மக்கள் உணர்ந்து கொள்வதற்கு பத்து வருடங்கள் எடுத்திருக்கின்றன.
அதே போல் இப்பொது சொல்கின்ற உண்மைகளையும் மக்கள் விளங்கிக் கொள்வதற்கு இன்னும் பத்து வருடங்கள் கூட எடுக்கலாம். அதற்காக மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்ற நாங்கள் இந்த உண்மைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. ஆகையினால் நாம் உண்மைகளை தொடர்ந்தும் சொல்லிக் கொண்டு இருப்போம். அதனை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்றும் நம்புகின்றோம்.
இவ்வாறான நிலையில் தான் சில தரப்புக்கள் எங்கள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அத்தோடு எங்களுக்கு எதிராக பல்வேறு சதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக எங்களுக்கு எதிராக ஊடகங்கள் கூட திசை திருப்பப்பட்டிருக்கின்றன. ஆகவே எங்களுக்கு எதிரானவற்றை ஊடகங்கள் பிரசுரிப்பது போன்று நாங்கள் சொல்கின்றவற்றை ஊடகங்கள் பிரசுரிக்க வேண்டுமென்று தான் கோருகின்றோம்.
இதே வேளை விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் புதிய கூட்டணியில் இணைவதற்கு நாங்கள் நிபந்தனை விதிப்பதாகவும் அந்தக் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை அல்லது சந்திப்புக்களுக்கு நாங்கள் செல்ல மறுப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏனெனில் கூட்டணி அமைப்பதில் நிபந்தனை விதித்திருப்பவரும் அதற்கான சந்திப்புக்களை தவிர்த்துள்ளதும் விக்னேஸ்வரன் ஐயா தான்.
புதிய கூட்டணியில் சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஈபீஆர்எல்எப் அமைப்பை இணைக்க வேண்டுமென்று கூறிக் கொண்டிருப்பவர் விக்னேஸ்வரன் ஐயாவே. எங்களது கட்சியின் சின்னத்தில் தான் வருவதாகவும் அதில் சுரேஸ்பிரேமச் சந்திரனையும் இணைக்க வேண்டுமென்று நிபந்தனை போட்டதும் அவர் தான். இறுதியாக எங்களுக்கும் அவருக்கும் நடைபெறவிருந்த சந்திப்பை இரத்துச் செய்ததும் அவர் தான். ஆனாலும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக அவருக்குச் சொல்லியிருக்கின்றோம். ஆகவே தொடர்ந்தும் எத்தனை நாட்களுக்கு இதே விடயத்தை கதைத்துக் கொண்டிருப்பது. ஏனவே அவரே இனி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.
எனினும் கொள்கையோடு செயற்படுகின்ற தரப்புக்களே தேவை. ஆதற்காக விக்கினெஸ்வரன் ஐயாவையும் எங்களையும் இணைய வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர். கொள்கையில்லாத தரப்புக்களுடன் இணைவதை மக்களும் விரும்பவில்லை. அவ்வாறு கொள்கையில்லாதவர்களையும் கொண்டு வர வேண்டுமென்ற நிபந்தனையை கூட விக்னேஸ்வரன் தான் விதிக்கின்றார்.
ஆகவே கொள்கையில்லாத ஈபிடிபி, கருணா, பிள்ளையானையும் விக்கினெஸ்வரன் இணைத்தக் கொள்வாரா என்ற கேள்வி எழுகின்றது. ஆகையினால் தான் கொள்கையில்லாத ஈபிஆர்எல்எப் போன்ற தரப்புக்களை இணைத்துக் கொள்வதென்ற அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார் இல்லை. அதனால் தான் எங்களுடன் சந்திப்பதற்கும் அவர் விரும்புகின்றாரில்லை. ஆக மொத்தத்தில் நிபந்தனையைப் போடுவதும் விக்கினேஸ்வரன் தான். அந்த நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளாததால் சந்திப்புக்களையும் தவிக்கின்றதும் விக்கினெஸ்வரன் ஐயா தான். இது தான் உண்மை என்றார்.
இதே வேளை ஓற்றையாட்சியின் அடிப்படையானது தான் புதிய அரசியலமைப்பு என்பதை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஒப்புக் கொண்டிருக்கின்றார். அவர் தமிழ் மக்களுக்கு பொய்யைச் சொல்லி ஏமாற்றினாலும் சிங்கள மக்களுக்கு பொய்யைச் சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருக்கின்றார் என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் விக்னேஸ்வரனே நிபந்தனைகளை விதிப்பதாகவும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக்களை அவரே தடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கும் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வல்லரசுகளின் நலன்களுக்காகச் செயற்பட்டு வருகின்ற கூட்டமைப்பு எதிர்காலத்தில் பாரிய தோல்வியை எதிர்நோக்குமென்பதால் அதற்கு மாற்றாக அந்த வல்லரசுகளுக்காகச் செயற்படக் கூடியவர்களை இணைத்து புதிய அணியொன்றை அந்த வல்லரசுகளே உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளைக் கைவிட்டு மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதால் அதிலிருந்த நாங்கள் வெளியேறி புதிய கட்சியை உருவாக்கி மக்களுக்கு உண்மைகளைச் சொல்லி வந்தோம். கடந்த பத்து வருடங்களாக நாங்கள் சொல்லி வந்த உண்மைகளை இன்றைக்கு மக்களும் உணரத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் மக்கள் கூட்டமைப்பு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றதால் அந்த மக்கள் எங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்ற அச்சம் இன்றைக்கு பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்தியா போன்ற சர்வதேச அல்லது வல்லரசுகளின் நல்னகளுக்காக அவர்களது எடுபிடிகளாக கூட்டமைப்பினர் செயற்பட்டு வந்தனர். ஆனால் கூட்டமைப்பின் இந்தச் செயற்பாடுகளை மக்கள் உணர்ந்துள்ளதால் கூட்டமைப்பினர் எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயம் பாரிய தோல்வியை எதிர்நோக்கப் போகின்றனர் என்ற அடிப்படையில் புதிய அணியொன்றை உருவாக்கும் செயற்பாடுகளில் இந்த வல்லரசுகள் இருக்கின்றன.
ஆனால் அந்த வல்லரசுகளின் நலன்களுக்காக மட்டும் செயற்பட நாம் ஒரு போதும் தயாரில்லை என்பதாலும் எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி பேரம் பேசக் கூடிய தரப்பாக நாங்கள் இருப்பதால் அவர்கள் தங்களுக்குச் சார்பாகச் செயற்படக் கூடியவர்களை இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்கப் போகின்றனர். அந்த அணியில் இந்தியாவின் அல்லது இலங்கை அரசுகளின் விசுவாசிகளாக இருக்கின்ற ஈபிஆர்எல்எப் போன்ற தரப்புக்கள் உள்வாங்கப்பட்டால் நாங்கள் அந்த அணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
ஏனெனில் கூட்டமைப்பினர் செய்து வருகின்ற அதே செயற்பாடுகளையே இவர்களும் செய்யப் போகின்றனர். அகவே அதில் நாமும் இணைந்து கொள்வதால் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. இந்த உண்மைகளை நாம் இன்று சொல்கின்றோம். ஆனால் கடந்த காலங்களில் கூட்டமைப்பு தொடர்பில் நாம் இவ்வாறு சொல்லி வந்த உண்மைகளை மக்கள் உணர்ந்து கொள்வதற்கு பத்து வருடங்கள் எடுத்திருக்கின்றன.
அதே போல் இப்பொது சொல்கின்ற உண்மைகளையும் மக்கள் விளங்கிக் கொள்வதற்கு இன்னும் பத்து வருடங்கள் கூட எடுக்கலாம். அதற்காக மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்ற நாங்கள் இந்த உண்மைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. ஆகையினால் நாம் உண்மைகளை தொடர்ந்தும் சொல்லிக் கொண்டு இருப்போம். அதனை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்றும் நம்புகின்றோம்.
இவ்வாறான நிலையில் தான் சில தரப்புக்கள் எங்கள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அத்தோடு எங்களுக்கு எதிராக பல்வேறு சதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக எங்களுக்கு எதிராக ஊடகங்கள் கூட திசை திருப்பப்பட்டிருக்கின்றன. ஆகவே எங்களுக்கு எதிரானவற்றை ஊடகங்கள் பிரசுரிப்பது போன்று நாங்கள் சொல்கின்றவற்றை ஊடகங்கள் பிரசுரிக்க வேண்டுமென்று தான் கோருகின்றோம்.
இதே வேளை விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் புதிய கூட்டணியில் இணைவதற்கு நாங்கள் நிபந்தனை விதிப்பதாகவும் அந்தக் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை அல்லது சந்திப்புக்களுக்கு நாங்கள் செல்ல மறுப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏனெனில் கூட்டணி அமைப்பதில் நிபந்தனை விதித்திருப்பவரும் அதற்கான சந்திப்புக்களை தவிர்த்துள்ளதும் விக்னேஸ்வரன் ஐயா தான்.
புதிய கூட்டணியில் சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஈபீஆர்எல்எப் அமைப்பை இணைக்க வேண்டுமென்று கூறிக் கொண்டிருப்பவர் விக்னேஸ்வரன் ஐயாவே. எங்களது கட்சியின் சின்னத்தில் தான் வருவதாகவும் அதில் சுரேஸ்பிரேமச் சந்திரனையும் இணைக்க வேண்டுமென்று நிபந்தனை போட்டதும் அவர் தான். இறுதியாக எங்களுக்கும் அவருக்கும் நடைபெறவிருந்த சந்திப்பை இரத்துச் செய்ததும் அவர் தான். ஆனாலும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக அவருக்குச் சொல்லியிருக்கின்றோம். ஆகவே தொடர்ந்தும் எத்தனை நாட்களுக்கு இதே விடயத்தை கதைத்துக் கொண்டிருப்பது. ஏனவே அவரே இனி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.

எனினும் கொள்கையோடு செயற்படுகின்ற தரப்புக்களே தேவை. ஆதற்காக விக்கினெஸ்வரன் ஐயாவையும் எங்களையும் இணைய வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர். கொள்கையில்லாத தரப்புக்களுடன் இணைவதை மக்களும் விரும்பவில்லை. அவ்வாறு கொள்கையில்லாதவர்களையும் கொண்டு வர வேண்டுமென்ற நிபந்தனையை கூட விக்னேஸ்வரன் தான் விதிக்கின்றார்.
ஆகவே கொள்கையில்லாத ஈபிடிபி, கருணா, பிள்ளையானையும் விக்கினெஸ்வரன் இணைத்தக் கொள்வாரா என்ற கேள்வி எழுகின்றது. ஆகையினால் தான் கொள்கையில்லாத ஈபிஆர்எல்எப் போன்ற தரப்புக்களை இணைத்துக் கொள்வதென்ற அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார் இல்லை. அதனால் தான் எங்களுடன் சந்திப்பதற்கும் அவர் விரும்புகின்றாரில்லை. ஆக மொத்தத்தில் நிபந்தனையைப் போடுவதும் விக்கினேஸ்வரன் தான். அந்த நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளாததால் சந்திப்புக்களையும் தவிக்கின்றதும் விக்கினெஸ்வரன் ஐயா தான். இது தான் உண்மை என்றார்.
இதே வேளை ஓற்றையாட்சியின் அடிப்படையானது தான் புதிய அரசியலமைப்பு என்பதை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஒப்புக் கொண்டிருக்கின்றார். அவர் தமிழ் மக்களுக்கு பொய்யைச் சொல்லி ஏமாற்றினாலும் சிங்கள மக்களுக்கு பொய்யைச் சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருக்கின்றார் என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.