அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கு கிடைத்த நன்மை என்னவென்பதை கூற முடியுமா? ஆனால் நாங்கள் வடக்கு அபி...
அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கு கிடைத்த நன்மை என்னவென்பதை கூற முடியுமா? ஆனால் நாங்கள் வடக்கு அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டோம். அடுத்துவரும் எமது ஆட்சியில் மக்கள் கருத்துக்கணிப்புக்கு உட்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
அரசியலமைப்பு உருவாக்க பணிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு, நேற்று உரையாற்றிய போதே மஹிந்த ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இந்த நிலைமையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் பொருத்தமற்றது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களிற்குள் அரசியலமைப்பை திருத்த முடியுமா?
அதேவேளை, அப்படியான திருத்தத்திற்கு நாம் ஆதரவளிக்கப் போவதுமில்லை. அரசியலமைப்பை திருத்த வேண்டுமெனில் மக்கள் கருத்துக்கணிப்பிற்கு போக வேண்டுமென கூறினோம். அதனை நிராகரித்தார்கள். மக்கள் கருத்தை கேட்காது திருத்தம் செய்ய முடியாது. அரசியலமைப்பு திருத்தம் என்ற பெயரில் இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நாங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களின் அபிப்பிராயத்துடன் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றே தெரிவித்தோம். ஆனால் புதிய அரசியலமைப்பு கொண்டு வருவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, அதனுடன் அரசியலமைப்பு திருத்தத்தை கைவிட்டது.
13 பிளசுக்கு நான் இணங்கினேன். இதில் நாட்டை பிளவுபடுத்தும் திட்டம் இல்லை. ஆனால் அவர்கள் செய்யவிருந்த திட்டத்தின்படி புதிய நாடுகள் உருவாகும் ஆபத்துக்கள் இருந்தன. மாகாணங்கள் பிரியும் நிலைமைகள் இருந்தன. அடுத்து வரும் எமது ஆட்சியில் நாம் மக்கள் கருத்துக்கணிப்பிற்கு விட்டு அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைக்காக தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலாக்கி விட்டது. இதற்கன முழுப் பொறுப்பையும் சுமந்திரன் எம்.பியே ஏற்க வேண்டும். இப்போது கிழக்கு மாகாணசபையும் இல்லை. வடக்கு மாகாணசபையும் இல்லை. ஐக்கிய தேசியக்கட்சி அரசுடன் இணைந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அநியாயத்தை செய்தது. ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளிப்பதால், தமிழ் மக்களிற்கு கிடைத்த நன்மை என்னவென்பதை இவர்களால் கூற முடியுமா?
வடக்கு மக்களிற்கு எமது ஆட்சியில் அனைத்து அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் வடக்கில் ஒரு மதகையேனும் அமைக்க முடிந்ததா?தமிழ் மக்களை வறுமையில் வைத்துக் கொண்டு தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இலக்காகவுள்ளது.
நாம் தமிழ் மக்களை வாழ வைப்போம். முதலில் உரிமைகளை பெறுவோம், பின்னர் அபிவிருத்தியை பற்றி பேசுவோம் என்றே தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்களிடம் கூறுகின்றனர். ஆனால் இவர்களால் தமிழ் மக்களிற்கு உரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை என்றார்.
அரசியலமைப்பு உருவாக்க பணிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு, நேற்று உரையாற்றிய போதே மஹிந்த ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இந்த நிலைமையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் பொருத்தமற்றது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களிற்குள் அரசியலமைப்பை திருத்த முடியுமா?
அதேவேளை, அப்படியான திருத்தத்திற்கு நாம் ஆதரவளிக்கப் போவதுமில்லை. அரசியலமைப்பை திருத்த வேண்டுமெனில் மக்கள் கருத்துக்கணிப்பிற்கு போக வேண்டுமென கூறினோம். அதனை நிராகரித்தார்கள். மக்கள் கருத்தை கேட்காது திருத்தம் செய்ய முடியாது. அரசியலமைப்பு திருத்தம் என்ற பெயரில் இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நாங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களின் அபிப்பிராயத்துடன் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றே தெரிவித்தோம். ஆனால் புதிய அரசியலமைப்பு கொண்டு வருவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, அதனுடன் அரசியலமைப்பு திருத்தத்தை கைவிட்டது.
13 பிளசுக்கு நான் இணங்கினேன். இதில் நாட்டை பிளவுபடுத்தும் திட்டம் இல்லை. ஆனால் அவர்கள் செய்யவிருந்த திட்டத்தின்படி புதிய நாடுகள் உருவாகும் ஆபத்துக்கள் இருந்தன. மாகாணங்கள் பிரியும் நிலைமைகள் இருந்தன. அடுத்து வரும் எமது ஆட்சியில் நாம் மக்கள் கருத்துக்கணிப்பிற்கு விட்டு அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைக்காக தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலாக்கி விட்டது. இதற்கன முழுப் பொறுப்பையும் சுமந்திரன் எம்.பியே ஏற்க வேண்டும். இப்போது கிழக்கு மாகாணசபையும் இல்லை. வடக்கு மாகாணசபையும் இல்லை. ஐக்கிய தேசியக்கட்சி அரசுடன் இணைந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அநியாயத்தை செய்தது. ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளிப்பதால், தமிழ் மக்களிற்கு கிடைத்த நன்மை என்னவென்பதை இவர்களால் கூற முடியுமா?

வடக்கு மக்களிற்கு எமது ஆட்சியில் அனைத்து அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் வடக்கில் ஒரு மதகையேனும் அமைக்க முடிந்ததா?தமிழ் மக்களை வறுமையில் வைத்துக் கொண்டு தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இலக்காகவுள்ளது.
நாம் தமிழ் மக்களை வாழ வைப்போம். முதலில் உரிமைகளை பெறுவோம், பின்னர் அபிவிருத்தியை பற்றி பேசுவோம் என்றே தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்களிடம் கூறுகின்றனர். ஆனால் இவர்களால் தமிழ் மக்களிற்கு உரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை என்றார்.