வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தவதற்காகவும், ஆறுதல் தெரிவ...
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தவதற்காகவும், ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் இன்று மதியம் வவுனியா சிறைச்சாலைக்கு முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் சென்றுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் ஏழுபேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று வவுனியா சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அனந்தி சசிதரன் குறிப்பிடும்போது,
கடந்த 27ம் திகதி அதிகாலை தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற சமயம், இலங்கை கடற்படையினால் அந்த படகு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மீனவர்களை மதுரையிலுள்ள சட்டத்தரணி தீரன் திருமுருகனின் வேண்டுதலுக்கு அமைய நேரில் சென்று பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
டீசலை வழங்கி இலங்கை கடற்படையினர் தங்களை திரும்பி அனுப்புவார்கள் என கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நம்பியிருந்ததாகவும், எனினும் அவர்களை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அனந்தி சசிதரன், அவர்களின் குடும்பத்தினருக்கு இத்தகவல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தணைத்தூதுவர் பாலச்சந்திரனுடனும் கதைத்துள்ளதாகவும், இவர்களின் விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக நம்புவதாகவும் அவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வந்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு உள்ளிட்ட இலங்கை கரையோரங்கள் வரை அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கையால், இலங்கை மீனவர்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் ஏழுபேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று வவுனியா சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அனந்தி சசிதரன் குறிப்பிடும்போது,
கடந்த 27ம் திகதி அதிகாலை தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற சமயம், இலங்கை கடற்படையினால் அந்த படகு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மீனவர்களை மதுரையிலுள்ள சட்டத்தரணி தீரன் திருமுருகனின் வேண்டுதலுக்கு அமைய நேரில் சென்று பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
டீசலை வழங்கி இலங்கை கடற்படையினர் தங்களை திரும்பி அனுப்புவார்கள் என கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நம்பியிருந்ததாகவும், எனினும் அவர்களை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அனந்தி சசிதரன், அவர்களின் குடும்பத்தினருக்கு இத்தகவல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தணைத்தூதுவர் பாலச்சந்திரனுடனும் கதைத்துள்ளதாகவும், இவர்களின் விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக நம்புவதாகவும் அவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வந்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு உள்ளிட்ட இலங்கை கரையோரங்கள் வரை அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கையால், இலங்கை மீனவர்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.