யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள...
யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனப் பெயர்ப் பட்டியலில் உள்ளவாங்கப்படாதவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுரை நியமனம் கிடைக்காத பட்டதாரி மாணவர்களான உயர் தொழில்நுட்பக் க ல்லூரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் மாணவர்களே இந்த கவனயீர்பபுப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
பட்டாதரிகளிடைடைய வெளிவாரி உள்வாரி என்ற பாகுபாடு காட்டோத, பதிவு செய்யப்படாத மாணவர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள், பட்டம் முடித்த பட்டதாரி மாணவர்களை புறக்கணிக்காமல் உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கு, போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறீதரன் பட்டதாரி மாணவர்களின் போராட்ட களத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்தனர்.

கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள சகல பட்டாதாரி மாணவர்ளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய அரசாங்கம் அமைச்சரரைவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளது. இனிவரும் காலங்களில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் வேலை வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், இனிமேலும் பட்டதாரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த அரசாங்கம் இடமளிக்காமல் வேலைவாய்ப்பினை வழங்க ஆலோசித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது போராட்டத்தினை மேற்கொணடு வரும் மாணவர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினை ஒகஸ்ட் மாத இறுதிக்குள் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனப் பெயர்ப் பட்டியலில் உள்ளவாங்கப்படாதவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுரை நியமனம் கிடைக்காத பட்டதாரி மாணவர்களான உயர் தொழில்நுட்பக் க ல்லூரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் மாணவர்களே இந்த கவனயீர்பபுப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
பட்டாதரிகளிடைடைய வெளிவாரி உள்வாரி என்ற பாகுபாடு காட்டோத, பதிவு செய்யப்படாத மாணவர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள், பட்டம் முடித்த பட்டதாரி மாணவர்களை புறக்கணிக்காமல் உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கு, போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறீதரன் பட்டதாரி மாணவர்களின் போராட்ட களத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்தனர்.

கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள சகல பட்டாதாரி மாணவர்ளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய அரசாங்கம் அமைச்சரரைவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளது. இனிவரும் காலங்களில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் வேலை வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், இனிமேலும் பட்டதாரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த அரசாங்கம் இடமளிக்காமல் வேலைவாய்ப்பினை வழங்க ஆலோசித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது போராட்டத்தினை மேற்கொணடு வரும் மாணவர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினை ஒகஸ்ட் மாத இறுதிக்குள் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.