யாழ் குறிகட்டுவானில் இருந்து தீவகத்தின் ஏனைய பகுதிகளிற்கு செல்வதற்கான படகுகளை செலுத்த இளைஞர்கள் பயிற்சியளிக்கப்படவில்லை. கடற்படையினர்தான் இப...
யாழ் குறிகட்டுவானில் இருந்து தீவகத்தின் ஏனைய பகுதிகளிற்கு செல்வதற்கான படகுகளை செலுத்த இளைஞர்கள் பயிற்சியளிக்கப்படவில்லை. கடற்படையினர்தான் இப்பொழுது படகுகளை செலுத்துகிறார்கள். கடற்புலிகளில் இருந்த கப்பலோட்டிகள் அணியை தந்தால் சான்றிதழ் வழங்கப்பட்டு, தொழில் வாய்ப்பு ஏற்படுத்த முடியுமா என சமுத்திர பல்கலைகழக பணிப்பாளரிடம் கேள்வியெழுப்பினார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி, சி.சிறிதரன்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த கேள்வியை எழுப்பினார்.
கூட்டத்தின்போது, வடக்கு மாகாண சமுத்திர பல்கலைகழத்தின் பௌதீக தேவைகள், மாணவர்களை இணைத்தல் தொடர்பில் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிறிதரன்,
சமுத்திர பல்கலைகழகத்தின் விளம்பரம் போதாததால் அது பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடம் இல்லாமல் உள்ளது என தெரிவித்ததுடன், கப்பல்களை செலுத்தும் பயிற்சியை சமுத்திர பல்கலைகழகம் வழங்குகிறதா என கேட்டார்.
சமுத்திர பல்கலைகழகத்தில் வழங்கப்படும் பயிற்சிகளின் மூலம் 50 அடிக்கு உட்பட்ட படகுகளையே செலுத்த முடியுமென்றும், அதற்கு மேலாக தீவுப்பகுதியில் சேவையில் ஈடுபடும் வடதாரகை, நெடுந்தாரகை போன்ற கப்பல்களை செலுத்த பயிற்சி வழங்கப்படவில்லையென்றார்.

இதன்போது சிறிதரன்- கடற்புலிகளில் இருந்த பலர் கப்பல்களை ஓட்டும் திறமையுள்ளவர்கள். ஆனால் அவர்களிடம் சான்றிதழ் இல்லை. இதனை காரணம் காட்டி, கடற்படையினரே தீவக படகுகளை செலுத்துகின்றனர். கடற்புலிகளில் இருந்த கப்பலோட்டிகள் அணியை தந்தால், சான்றிதழ் வழங்கி, தொழில் வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா?. அப்படியெனில் கடற்புலிகள் அணியை தருவேன் என்றார்.
இதற்கு, பணிப்பாளர் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார்.
கூட்டத்திற்கு தலைமைதாங்கிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதற்றமடைந்து, இந்த குழுவுடன் தொடர்பில்லாத விடயங்களை பேசி பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என கூறி, விடயத்தை முடித்து வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த கேள்வியை எழுப்பினார்.
கூட்டத்தின்போது, வடக்கு மாகாண சமுத்திர பல்கலைகழத்தின் பௌதீக தேவைகள், மாணவர்களை இணைத்தல் தொடர்பில் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிறிதரன்,
சமுத்திர பல்கலைகழகத்தின் விளம்பரம் போதாததால் அது பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடம் இல்லாமல் உள்ளது என தெரிவித்ததுடன், கப்பல்களை செலுத்தும் பயிற்சியை சமுத்திர பல்கலைகழகம் வழங்குகிறதா என கேட்டார்.
சமுத்திர பல்கலைகழகத்தில் வழங்கப்படும் பயிற்சிகளின் மூலம் 50 அடிக்கு உட்பட்ட படகுகளையே செலுத்த முடியுமென்றும், அதற்கு மேலாக தீவுப்பகுதியில் சேவையில் ஈடுபடும் வடதாரகை, நெடுந்தாரகை போன்ற கப்பல்களை செலுத்த பயிற்சி வழங்கப்படவில்லையென்றார்.

இதன்போது சிறிதரன்- கடற்புலிகளில் இருந்த பலர் கப்பல்களை ஓட்டும் திறமையுள்ளவர்கள். ஆனால் அவர்களிடம் சான்றிதழ் இல்லை. இதனை காரணம் காட்டி, கடற்படையினரே தீவக படகுகளை செலுத்துகின்றனர். கடற்புலிகளில் இருந்த கப்பலோட்டிகள் அணியை தந்தால், சான்றிதழ் வழங்கி, தொழில் வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா?. அப்படியெனில் கடற்புலிகள் அணியை தருவேன் என்றார்.
இதற்கு, பணிப்பாளர் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார்.
கூட்டத்திற்கு தலைமைதாங்கிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதற்றமடைந்து, இந்த குழுவுடன் தொடர்பில்லாத விடயங்களை பேசி பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என கூறி, விடயத்தை முடித்து வைத்தார்.