செஞ்சோலை படுகொலையின் 13வது ஆண்டு நினைவஞ்சலி இன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்றது. தற்போது பராமரிப்பின்றி உள்ள வளாகத்திற்குள் இந்...
செஞ்சோலை படுகொலையின் 13வது ஆண்டு நினைவஞ்சலி இன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்றது. தற்போது பராமரிப்பின்றி உள்ள வளாகத்திற்குள் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
படுகொலை இடம்பெற்ற நேரமான காலை 7.05 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்விற்கு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகனேசன் தலைமைதாங்கினார்.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள், பொதுமக்களுடன், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆ. புவனேஸ்வரனும் கலந்து கொண்டார்.
படுகொலை இடம்பெற்ற நேரமான காலை 7.05 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்விற்கு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகனேசன் தலைமைதாங்கினார்.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள், பொதுமக்களுடன், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆ. புவனேஸ்வரனும் கலந்து கொண்டார்.