ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது. கொழும்பில் இன்று இடம்பெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் ஜேவிபியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவ...
ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது.
கொழும்பில் இன்று இடம்பெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் ஜேவிபியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கட்சியின் தலைவர் அநுரு குமாரதிசநாயக்கவே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் சுமார் 28 பொதுஅமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணியை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
ராஜபக்சக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என்றும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி ஜேவிபியின் வேட்பாளருக்கே உள்ளதாகவும் ஜேவிபி தெரிவித்துள்ளது. அத்துடன், வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பாகவே, ஐ.தே.க தோல்வியடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று மாலை காலி முகத்திடலில் ஜேவிபியின் கூட்டம் இடம்பெறும்.
கொழும்பில் இன்று இடம்பெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் ஜேவிபியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கட்சியின் தலைவர் அநுரு குமாரதிசநாயக்கவே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் சுமார் 28 பொதுஅமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணியை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
ராஜபக்சக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என்றும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி ஜேவிபியின் வேட்பாளருக்கே உள்ளதாகவும் ஜேவிபி தெரிவித்துள்ளது. அத்துடன், வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பாகவே, ஐ.தே.க தோல்வியடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று மாலை காலி முகத்திடலில் ஜேவிபியின் கூட்டம் இடம்பெறும்.