மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நேற்று இடம்பெற்றது. விஜேராமவிலுள்ள...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
விஜேராமவிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இன்று பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு நடைபெறும் நிலையில், இன்றைய கூட்டம் தொடர்பாக சில ஆலோசனைகள் நடந்ததாக தெரிகிறது.
இன்று கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ச, தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
விஜேராமவிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இன்று பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு நடைபெறும் நிலையில், இன்றைய கூட்டம் தொடர்பாக சில ஆலோசனைகள் நடந்ததாக தெரிகிறது.
இன்று கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ச, தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.