ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சஜித் அணியின் விடாப்பிடியும், கூட்டணி தலைவ...
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சஜித் அணியின் விடாப்பிடியும், கூட்டணி தலைவர்களின் சஜித் ஆதரவு நிலைப்பாடும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய கூட்டணியொன்று நாளை (5) கைச்சாத்திடப்படுமென்றும், அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவித்தல் வெளியாகுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, கரு ஜயசூரியவுடன் இரகசியமாக பேச்சு நடத்திய ரணில், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்கும் தீர்மானத்தை தனித்து மேற்கொண்டார்.
கருவை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் தீர்மானித்ததன் பின்னணியில் ஒரேயொரு காரணமேயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க வேண்டுமென ரணில் திட்டமிடும் சூழலில், தனக்கு ஏற்ற ஜனாதிபதியொருவரை நியமிக்க ரணில் விரும்புகிறார். சஜித்தை ஜனாதிபதியாக்கினால், தனித்து செயற்படுவார், தனது கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என ரணில் தரப்பு கருதுவதாலேயே, கருவை ஜனாதிபதியாக்க ரணில் விரும்பினார்.
எனினும், ரணிலின் முடிவிற்கு கட்சியின் செயற்குழுவிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சஜித் தவிர்ந்த வேறொரு ஜனாதிபதி வேட்பாளரை ஏற்க மாட்டோம் என கட்சிக்குள் பலமான அப்பிராயம் உருவாகியுள்ளது. கட்சியை ரணிலால் புதிதாக கட்டியெழுப்ப முடியாது, புதிய தலைமைத்துவம் அவசியமென செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சி தலைமையையும், பதவிகளையும் தொடர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க தான் விரும்பவில்லையென இதன்போது ரணில் தெரிவித்தார். ரணிலை இந்த முடிவிற்கு அழைத்து வந்ததே ஒரு வெற்றியென சஜித் தரப்பு கருதுகிறது.
இந்தநிலையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சம்பிக்க மற்றும் ராஜித ஆகியோர் திடீர் நிலைப்பாடு எடுத்து, சஜித் வேட்பாளர் எனில் தாம் கூட்டணியிலிருந்து விலகவுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
எனினும், கூட்டணியின் ஏனைய பங்காளி கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய வேண்மெனில், சஜித் தவிர்ந்த வேறொருவரும் தமது கூட்டணியில் இல்லையென அவர்கள் ரணிலிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர். ராஜித, சம்பிக்க போல பகிரங்கமாக கூறி விவகாரத்தை பொதுவெளிக்கு கொண்டு வரவில்லையே தவிர, தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
சம்பிக்க, ராஜித ஆகியோரின் கட்சிகளிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் கட்சிகள் இரண்டினதை போன்ற கட்சி கட்டமைப்போ, வாக்கு வங்கியோ கிடையாது என்பதால், இந்த விவகாரத்தில் மூன்று கட்சிகளின் நிலைப்பாடே வெற்றியடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த இழுபறிகளால் நாளை (5) ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகாது. ரணில் தரப்பிலுள்ள ரவி கருணாநாயக்க போன்றவர்கள், யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளாமல் நாளை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள். எனினும், இந்த விவகாரத்தில் சஜித் ஆதரவு நிலைப்பாடு கட்சிக்குள் வலுத்து வருவதால், நாளை ஒப்பந்தம் கைச்சாத்தாகது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள் வாய்ப்பளிக்கப்படாவிட்டால் தனித்து போட்டியிடுவது குறித்தும் சஜித் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனையில் நடக்கும் இந்த முயற்சியில், சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.தேக.கவின் ஒரு பகுதியை இணைத்து சஜித்தை களமிறக்கும் முயற்சிகள் நடக்கிறது.
சஜித்தின் அதிரடி நகர்வுகளால், சஜித் அல்லாத வேட்பாளர் களமிறங்கினால் வெற்றியடைய மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சஜித்தே வேட்பாளர் என்ற நிலைப்பாட்டிற்கு ரணில் வருவதை தவிர வேறு வாய்ப்பில்லையென தெரிகிறது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய கூட்டணியொன்று நாளை (5) கைச்சாத்திடப்படுமென்றும், அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவித்தல் வெளியாகுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, கரு ஜயசூரியவுடன் இரகசியமாக பேச்சு நடத்திய ரணில், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்கும் தீர்மானத்தை தனித்து மேற்கொண்டார்.
கருவை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் தீர்மானித்ததன் பின்னணியில் ஒரேயொரு காரணமேயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க வேண்டுமென ரணில் திட்டமிடும் சூழலில், தனக்கு ஏற்ற ஜனாதிபதியொருவரை நியமிக்க ரணில் விரும்புகிறார். சஜித்தை ஜனாதிபதியாக்கினால், தனித்து செயற்படுவார், தனது கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என ரணில் தரப்பு கருதுவதாலேயே, கருவை ஜனாதிபதியாக்க ரணில் விரும்பினார்.
எனினும், ரணிலின் முடிவிற்கு கட்சியின் செயற்குழுவிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சஜித் தவிர்ந்த வேறொரு ஜனாதிபதி வேட்பாளரை ஏற்க மாட்டோம் என கட்சிக்குள் பலமான அப்பிராயம் உருவாகியுள்ளது. கட்சியை ரணிலால் புதிதாக கட்டியெழுப்ப முடியாது, புதிய தலைமைத்துவம் அவசியமென செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சி தலைமையையும், பதவிகளையும் தொடர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க தான் விரும்பவில்லையென இதன்போது ரணில் தெரிவித்தார். ரணிலை இந்த முடிவிற்கு அழைத்து வந்ததே ஒரு வெற்றியென சஜித் தரப்பு கருதுகிறது.
இந்தநிலையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சம்பிக்க மற்றும் ராஜித ஆகியோர் திடீர் நிலைப்பாடு எடுத்து, சஜித் வேட்பாளர் எனில் தாம் கூட்டணியிலிருந்து விலகவுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
எனினும், கூட்டணியின் ஏனைய பங்காளி கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய வேண்மெனில், சஜித் தவிர்ந்த வேறொருவரும் தமது கூட்டணியில் இல்லையென அவர்கள் ரணிலிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர். ராஜித, சம்பிக்க போல பகிரங்கமாக கூறி விவகாரத்தை பொதுவெளிக்கு கொண்டு வரவில்லையே தவிர, தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
சம்பிக்க, ராஜித ஆகியோரின் கட்சிகளிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் கட்சிகள் இரண்டினதை போன்ற கட்சி கட்டமைப்போ, வாக்கு வங்கியோ கிடையாது என்பதால், இந்த விவகாரத்தில் மூன்று கட்சிகளின் நிலைப்பாடே வெற்றியடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த இழுபறிகளால் நாளை (5) ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகாது. ரணில் தரப்பிலுள்ள ரவி கருணாநாயக்க போன்றவர்கள், யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளாமல் நாளை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள். எனினும், இந்த விவகாரத்தில் சஜித் ஆதரவு நிலைப்பாடு கட்சிக்குள் வலுத்து வருவதால், நாளை ஒப்பந்தம் கைச்சாத்தாகது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள் வாய்ப்பளிக்கப்படாவிட்டால் தனித்து போட்டியிடுவது குறித்தும் சஜித் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனையில் நடக்கும் இந்த முயற்சியில், சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.தேக.கவின் ஒரு பகுதியை இணைத்து சஜித்தை களமிறக்கும் முயற்சிகள் நடக்கிறது.
சஜித்தின் அதிரடி நகர்வுகளால், சஜித் அல்லாத வேட்பாளர் களமிறங்கினால் வெற்றியடைய மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சஜித்தே வேட்பாளர் என்ற நிலைப்பாட்டிற்கு ரணில் வருவதை தவிர வேறு வாய்ப்பில்லையென தெரிகிறது.