யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அ...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டவர்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வழிபாட்டின் பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வரை பிரதமர் சந்தித்து பேசினார். இதன்போது சைவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் கலாநிதி ஆறு.திருமுருகன் உள்ளிட்ட சைவசமய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.