முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ் கட்சிகள் சிலவற்றிற்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் தெற்கு இடதுசாரி கட்ச...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ் கட்சிகள் சிலவற்றிற்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் தெற்கு இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, தினேஷ் குணவர்த்தன தரப்பிற்கும் தமிழ் கட்சிகள் சிலவற்றிற்குமிடையில் கடந்த சில வாரங்களாக சந்திப்புக்கள் நடந்து வந்தது. ஏற்கனவே இரண்டு தரப்பும் இரண்டு முறை சந்தித்து பேசியிருந்தன. ஈ.பி.டி.பி, சிறிரேலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி, ஈரோஸ், பிரபா கணேசன் தரப்பு, அருண் தம்பி முத்து தரப்பு ஆகியன சந்திப்பில் கலந்து கொண்டன.
சில வாரங்களின் முன்னர், இந்த தமிழ் தரப்புக்கள் பசில் ராஜபக்சவையும் சந்தித்து பேசியிருந்தன.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பின்னர் பொதுஜன பெரமுன எதையெல்லாம் நிறைவேற்றும் என்பதை கலந்துரையாடி, அவற்றை தேர்தலின் முன்பாக மக்களிற்கு அறிவிப்பதே இந்த சந்திப்பின் நோக்கம்.
இதன்போது, ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விவகாரங்களை தெரிவித்தனர். கடந்த சந்திப்புக்களில் மஹிந்த தரப்பிடம் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தல், அரசியல் கைதிகள், காணி உள்ளிட்ட விடயங்களை அழுத்தமாக ஈ.பி.டி.பி வலியுறுத்தியிருந்தது.
நேற்றைய சந்திப்பில் விடயங்களை ஒருங்கிணைந்து வெளிப்படுத்துவதில் முன்கூட்டிய திட்டங்கள் இருக்கவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொன்றை பேசிக் கொண்டிருந்தார்கள். இதனாலோ என்னவோ, ஈ.பி.டி.பி தரப்பிலும் நேற்று மேலோட்டமாகவே உரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு பொறிமுறை, யாழ் குடாநாட்டிற்கு குடிநீர், தீவகத்தில் ஆடைத்தொழிற்சாலைகள், உடனடியாக வடக்கு கிழக்கில் தமிழ் பொலிசார், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டது.
தமிழ் பொலிசார் பற்றி குறிப்பிட்டபோது, தனது முன்னைய ஆட்சிக்காலத்திலும் தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு உள்ளீர்க்க முயன்றதாகவும், ஆனால் அதை தமிழ் இளைஞர்கள் ஆதரிக்கவில்லையென்றும் மஹிந்த குறிப்பிட்டார்.
முழுமையான வீட்டுத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென பிரபா கணேசன் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கில் இளைஞர்கள் அதிகமானவர்கள் வெளிநாட்டுக்கு போகிறார்கள், போக விரும்புகிறார்கள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான வேலைவாய்ப்பை உருவாக்கினால் அதை தடுக்கலாம் என வரதராஜ பெருமாள் குறிப்பிட்டார்.
“சிங்கள இளைஞர்களும்தான் வெளிநாடு போகிறார்கள். இது நாடு முழுவதுமுள்ள பிரச்சனை“ என மஹிந்த குறிப்பிட்டார்.
சந்திப்பு 7 மணிக்கு நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சலிந்த திசாநாயக்க எம்.பியின் மரணவீட்டிற்கு சென்று வந்ததால் மஹிந்த ராஜபக்ச ஒரு மணித்தியாலம் தாமதமாகவே வந்தார். விஜேராமவிலுள்ள அவரது இல்லத்தில் இரவு 8 மணி தொடக்கம் 9 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்பில் தமிழ் கட்சிகளால் வைக்கப்பட்ட முன்மொழிவுகளை, திஸ்ஸ விதாரணவின் ஊடாக ஆவணமாக தயாரித்து தருமாறு மஹிந்த குறிப்பிட்டார்.
அத்துடன், அடுத்த ஜனாதிபதியாக தமது தரப்பிலிருந்து யார் களமிறங்கினாலும், அந்த ஆட்சியை பின்னணியிலிருந்து தானே செயற்படுத்துவேன் என்பதால், வேட்பாளர் குறித்து தமிழ் தரப்புக்கள் அச்சமடைய வேண்டியதில்லையென்ற சாரப்பட மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு தரப்பும் தொடர்ந்து நடத்தும் பேச்சில், பகிரங்கமாக குறிப்பிடப்படக் கூடியவை, பகிரங்கப்படுத்தாமல் செயற்படுத்துபவை என இரண்டு பட்டியல்களின் கீழ் விவகாரங்களை நிரல்ப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.13வது திருத்தத்தை அமுல்படுத்துவோம் என்பதை பகிரங்கப்படுத்தப்படாத நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுத்த மஹிந்த ராஜபக்ச முன்னதாக தெரிவித்தபோதும், அதை பகிரங்கப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுத்த வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியதாக தெரிகிறது. இதன் பின்னணியிலேயே, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, அடுத்த தமது ஆட்சியில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என குறிப்பிட்டிருந்தார்.
வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, தினேஷ் குணவர்த்தன தரப்பிற்கும் தமிழ் கட்சிகள் சிலவற்றிற்குமிடையில் கடந்த சில வாரங்களாக சந்திப்புக்கள் நடந்து வந்தது. ஏற்கனவே இரண்டு தரப்பும் இரண்டு முறை சந்தித்து பேசியிருந்தன. ஈ.பி.டி.பி, சிறிரேலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி, ஈரோஸ், பிரபா கணேசன் தரப்பு, அருண் தம்பி முத்து தரப்பு ஆகியன சந்திப்பில் கலந்து கொண்டன.
சில வாரங்களின் முன்னர், இந்த தமிழ் தரப்புக்கள் பசில் ராஜபக்சவையும் சந்தித்து பேசியிருந்தன.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பின்னர் பொதுஜன பெரமுன எதையெல்லாம் நிறைவேற்றும் என்பதை கலந்துரையாடி, அவற்றை தேர்தலின் முன்பாக மக்களிற்கு அறிவிப்பதே இந்த சந்திப்பின் நோக்கம்.
இதன்போது, ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விவகாரங்களை தெரிவித்தனர். கடந்த சந்திப்புக்களில் மஹிந்த தரப்பிடம் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தல், அரசியல் கைதிகள், காணி உள்ளிட்ட விடயங்களை அழுத்தமாக ஈ.பி.டி.பி வலியுறுத்தியிருந்தது.
நேற்றைய சந்திப்பில் விடயங்களை ஒருங்கிணைந்து வெளிப்படுத்துவதில் முன்கூட்டிய திட்டங்கள் இருக்கவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொன்றை பேசிக் கொண்டிருந்தார்கள். இதனாலோ என்னவோ, ஈ.பி.டி.பி தரப்பிலும் நேற்று மேலோட்டமாகவே உரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு பொறிமுறை, யாழ் குடாநாட்டிற்கு குடிநீர், தீவகத்தில் ஆடைத்தொழிற்சாலைகள், உடனடியாக வடக்கு கிழக்கில் தமிழ் பொலிசார், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டது.
தமிழ் பொலிசார் பற்றி குறிப்பிட்டபோது, தனது முன்னைய ஆட்சிக்காலத்திலும் தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு உள்ளீர்க்க முயன்றதாகவும், ஆனால் அதை தமிழ் இளைஞர்கள் ஆதரிக்கவில்லையென்றும் மஹிந்த குறிப்பிட்டார்.
முழுமையான வீட்டுத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென பிரபா கணேசன் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கில் இளைஞர்கள் அதிகமானவர்கள் வெளிநாட்டுக்கு போகிறார்கள், போக விரும்புகிறார்கள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான வேலைவாய்ப்பை உருவாக்கினால் அதை தடுக்கலாம் என வரதராஜ பெருமாள் குறிப்பிட்டார்.
“சிங்கள இளைஞர்களும்தான் வெளிநாடு போகிறார்கள். இது நாடு முழுவதுமுள்ள பிரச்சனை“ என மஹிந்த குறிப்பிட்டார்.
சந்திப்பு 7 மணிக்கு நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சலிந்த திசாநாயக்க எம்.பியின் மரணவீட்டிற்கு சென்று வந்ததால் மஹிந்த ராஜபக்ச ஒரு மணித்தியாலம் தாமதமாகவே வந்தார். விஜேராமவிலுள்ள அவரது இல்லத்தில் இரவு 8 மணி தொடக்கம் 9 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்பில் தமிழ் கட்சிகளால் வைக்கப்பட்ட முன்மொழிவுகளை, திஸ்ஸ விதாரணவின் ஊடாக ஆவணமாக தயாரித்து தருமாறு மஹிந்த குறிப்பிட்டார்.
அத்துடன், அடுத்த ஜனாதிபதியாக தமது தரப்பிலிருந்து யார் களமிறங்கினாலும், அந்த ஆட்சியை பின்னணியிலிருந்து தானே செயற்படுத்துவேன் என்பதால், வேட்பாளர் குறித்து தமிழ் தரப்புக்கள் அச்சமடைய வேண்டியதில்லையென்ற சாரப்பட மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு தரப்பும் தொடர்ந்து நடத்தும் பேச்சில், பகிரங்கமாக குறிப்பிடப்படக் கூடியவை, பகிரங்கப்படுத்தாமல் செயற்படுத்துபவை என இரண்டு பட்டியல்களின் கீழ் விவகாரங்களை நிரல்ப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.13வது திருத்தத்தை அமுல்படுத்துவோம் என்பதை பகிரங்கப்படுத்தப்படாத நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுத்த மஹிந்த ராஜபக்ச முன்னதாக தெரிவித்தபோதும், அதை பகிரங்கப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுத்த வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியதாக தெரிகிறது. இதன் பின்னணியிலேயே, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, அடுத்த தமது ஆட்சியில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என குறிப்பிட்டிருந்தார்.