வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார த...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்கள், மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்பிராந்திய அலுவலகத்திலும் முறையிட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் தமக்கு அரச நியமனம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன் பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இந் நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகுதி சுகாதார தொண்டர்களுக்கு நாளை வியாழக்கிழமை யாழில் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், அந்த நியமனத்தில் முறைகேடுகள் இருப்பதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினம் இன்று நடைபெற்ற நிலையிலேயே, அதற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ் நகரிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்குச் சென்ற சுகாதார தொண்டர்கள் தமக்கான அரச நியமனத்தில் முறைகேடுகள் உள்ளதாகவும் இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் முறையிட்டுள்ளனர்.

இந் நிலையில் சுகாதார தொண்டர்களின் கோரிக்கைகள் தொடர்பிலான முறைப்பாட்டு அறிக்கையைப் பெற்றுக்கொண்ட மனித உரிமை ஆணைக்குழுவினர் முறைப்பாட்டைப் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை வழங்கப்படவுள்ள சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தமக்கு அநீதிகள் இழைக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் செல்வாக்குகளினடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய சுகாதார தொண்டர்கள், இந்த நியமனம் வழங்கப்படுவதை நிறுத்தி பாகுபாடு காட்டாது அனைவருக்கும் நியமனத்தை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் தமக்கு அரச நியமனம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன் பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இந் நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகுதி சுகாதார தொண்டர்களுக்கு நாளை வியாழக்கிழமை யாழில் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், அந்த நியமனத்தில் முறைகேடுகள் இருப்பதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினம் இன்று நடைபெற்ற நிலையிலேயே, அதற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ் நகரிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்குச் சென்ற சுகாதார தொண்டர்கள் தமக்கான அரச நியமனத்தில் முறைகேடுகள் உள்ளதாகவும் இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் முறையிட்டுள்ளனர்.

இந் நிலையில் சுகாதார தொண்டர்களின் கோரிக்கைகள் தொடர்பிலான முறைப்பாட்டு அறிக்கையைப் பெற்றுக்கொண்ட மனித உரிமை ஆணைக்குழுவினர் முறைப்பாட்டைப் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை வழங்கப்படவுள்ள சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தமக்கு அநீதிகள் இழைக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் செல்வாக்குகளினடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய சுகாதார தொண்டர்கள், இந்த நியமனம் வழங்கப்படுவதை நிறுத்தி பாகுபாடு காட்டாது அனைவருக்கும் நியமனத்தை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.