இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்களும் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம், மன்னாரை சேர்ந்த 18 மீனவர்கள் அண...
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்களும் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், மன்னாரை சேர்ந்த 18 மீனவர்கள் அண்மையில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். சீன ஜனாதிபதி தமிழகம் வரவதையொட்டி, கடல்வழியாக இந்தியாவிற்குள் யாரும் நுழையலாமென்ற சந்தேகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தயிருந்த இந்திய கடற்படையினரால், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, மீனவர் விடுதலைக்கு பல்வேறு தரப்புக்களும் முயற்சியில் ஈடுபட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிடமும் பாதிக்கப்பட்டவர்கள் உதவிகோரியிருந்தனர். மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் கொழும்பு இந்திய தூதரகத்துடன் தொடர்புகொண்டு மீனவர் விடுதலை தொடர்பான பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 23ம் திகதி யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு மீனவர் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றன. எனினும், போராட்டக்காரர்கள் தூதரகத்தை அண்மிக்க முடியாமல் பொலிசார் தடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (25) இரவு சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேரும் விடுவிக்கப்பட்டு சென்னையிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் நேற்றிரவு, மீனவர் விடுதலைக்கு முயற்சித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு தொலைபேசியில் அறிவித்தனர்.
இன்று அல்லது நாளை மீனவர்கள் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், மன்னாரை சேர்ந்த 18 மீனவர்கள் அண்மையில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். சீன ஜனாதிபதி தமிழகம் வரவதையொட்டி, கடல்வழியாக இந்தியாவிற்குள் யாரும் நுழையலாமென்ற சந்தேகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தயிருந்த இந்திய கடற்படையினரால், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, மீனவர் விடுதலைக்கு பல்வேறு தரப்புக்களும் முயற்சியில் ஈடுபட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிடமும் பாதிக்கப்பட்டவர்கள் உதவிகோரியிருந்தனர். மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் கொழும்பு இந்திய தூதரகத்துடன் தொடர்புகொண்டு மீனவர் விடுதலை தொடர்பான பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 23ம் திகதி யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு மீனவர் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றன. எனினும், போராட்டக்காரர்கள் தூதரகத்தை அண்மிக்க முடியாமல் பொலிசார் தடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (25) இரவு சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேரும் விடுவிக்கப்பட்டு சென்னையிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் நேற்றிரவு, மீனவர் விடுதலைக்கு முயற்சித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு தொலைபேசியில் அறிவித்தனர்.
இன்று அல்லது நாளை மீனவர்கள் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.