மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உள்பட இரண்டு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்...
மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உள்பட இரண்டு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளன.
மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடென்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல், வீட்டிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருள்களை அடித்து உடைத்து சேதமாக்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதமாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இந்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கும்பல் வந்து செல்வதாகவும், அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டமையால் அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்த கட்டடத்தை இடித்தழித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்தே அந்தக் கும்பல் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றனது.
அந்த வீட்டிலிருந்து தப்பித்த கும்பல், அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி , கேற் என்பவற்றையும் சேதமாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் இயங்குவதாகவும் அவற்றை அடக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவருடத்திற்கு முன்னர் முற்றாக அடக்குவோம் என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்த நிலையில் , இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடென்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல், வீட்டிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருள்களை அடித்து உடைத்து சேதமாக்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதமாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இந்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கும்பல் வந்து செல்வதாகவும், அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டமையால் அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்த கட்டடத்தை இடித்தழித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்தே அந்தக் கும்பல் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றனது.
அந்த வீட்டிலிருந்து தப்பித்த கும்பல், அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி , கேற் என்பவற்றையும் சேதமாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் இயங்குவதாகவும் அவற்றை அடக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவருடத்திற்கு முன்னர் முற்றாக அடக்குவோம் என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்த நிலையில் , இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.